கிறிஸ்டோபர் கொலம்பஸ்
அமெரிக்காவின் ஆரம்பம்
உலகம் உருண்டையானது என்பது நம்மைப்
பொறுத்தளவில் தெரிந்த ஒரு விடையமாகும்.
ஆனால் 15ம் நூற்றாண்டில் இருந்த நிலை வேறு.
அப்போது ஐரோப்பாவில் கத்தோலிக்க மதத்தலைவர்கள் பூமி தட்டையானது என்று
கருதி இருந்தனர். அந்நாட்களில் மக்கள் இம் முடிவில் உறுதியாக
இருந்த்தோடு அல்லாமல் பிரபஞ்சத்தின் நடு அச்சு பூமியே எனவும் நம்பினார்கள்.
சில மதத்தலைவகளிடையேயும் பல அறிஞர்களிடையேயும்
இதற்கு மாறான கருத்து நிலவி வந்த்து.
முன்னோர்களில் பலர் `உலகம் உருண்டையானது`
என கூறியதில் உண்மை இருக்கலாம் என அவர்கள் நம்பினார்கள். இருந்தபோதிலும் மக்களிடையே காணப்பட்ட நம்பிக்கைக்கு எதிராக கருத்து தெரிவிக்க
அவர்கள் விரும்பவில்லை அத்தோடு தங்களுடைய கருத்தை அவர்களுக்கு மாறாக தெரிவிக்கவும்
அஞ்சினார்கள்.
![]() |
கொலம்பஸ் பயணப் பாதை |
அமெரிக்காவை பொறுத்தளவில் அட்லாண்டிக்
சமுத்திரமே அவர்களுக்கு எல்லைக் கோடாக இருந்தது. அதை தாண்டி யாரும் சென்றதும் இல்லை.
செல்லத் துணியவும் இல்லை. அட்லாண்டிக் சமுத்திரத்தை
தாண்டி அதன் விளிம்பை கடந்து விட்டால் பாதாளத்தில் தான் விழ வேண்டும் என சிலர் முட்டாள்
தனமாக எண்ணி இருந்தனர். அப்போது கொலம்பஸ் மேற்கு திசையில் பயணம்
செய்து கிழக்கே உள்ள நாடுகளை அடையாப் போவதாக அறிவித்த போது பலர் அஞ்சினார்கள் அத்தோடு
அதனை எதிர்த்தும் நின்றனர்.
கிழக்கத்திய நாடுகளை அடைய தரை மார்க்கம்
மட்டும்மல்லாமல் கடல் வழியே செல்லவும் கண்டுபிடிக்க பட வேண்டிய அவசியத்தை பெரும்பாலான
அரசர்களும் வணிகர்களும் உணர்ந்து இருந்தனர்.
அத்துடன் குறிப்பிட்ட கடல் மார்க்கங்கள் குறிப்பிட்ட அரசர்களுக்கு சொந்தமாக
இருந்தது.
தொடரும்....
No comments:
Post a Comment