ராஜ ராஜ சோழன்
 |
மன்னன் ராஜ ராஜ சோழன்
|
தமிழனின் பெருமையை உலகிற்கு பரை சாற்றிய மன்னர்களில் தலை சிறந்தவன் "ராஜ ராஜ சோழன்" என்றால் மிகையாகாது. இவரின் சாதனைகள் இன்றளவும் உலகினால் வியத்தகு விந்தையாகவே பார்க்கப்படுகின்றது. மத்திய காலமாகிய ஐரோப்பாவின் இருண்ட காலப்பகுதியில் ராஜ ராஜ சோழன் இந்தியாவில் அரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தினார்.
சோழராட்சி காலத்தில் அனைத்து அம்சங்களும், நிதி, நீதி (சட்டம்), நிர்வாகம் ( மண்டலம், ஊர்கள், கிராமம்), கலை (கட்டிடம், ஓவியம், சிற்பம்), படை (காலாட் படை, குதிரை படை, யானை படை, கடற் படை) அனைத்தும் சிறப்பாக விளங்கியது. இவை அனைத்தும் உத்தம சோழ மன்னனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ராஜ ராஜ சோழ மன்னன் காலத்தில் மிக சிறப்பாக காணப்பட்டது.
ஆட்சிக்கு ராஜ ராஜ சோழன் வருகை.
பராந்தக சோழரின் இளைய மகனான பொன்னியின் செல்வன் ஆட்சி பீடம் ஏறுவார் என அதே காலத்தில் இருந்த யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சோழ சாம்ராஜ்ய மக்களின் விருப்பமும் அதுவாக இருந்த போதிலும் அதற்கு பராந்தக சோழரின் அண்ணன் மகனும், பொன்னியின் செல்வரின் அண்ணனான ஆதித்த கரிகாலரும் ஒரு விதத்தில் தடையாக இருந்தனர் என்றே சொல்லலாம். பரந்தக சோழரின் மூத்த மகன் ஆதித்தகரிகாலர் ஒர் சூழ்ச்சியால் அகப்பட்டு மாண்டார். அவரின் வீரமும், கோபமும் அவருக்கு முடிவினை கொண்டு வந்தது. அதன் பிறகு பல கலகங்களை கட்டுப்படுத்திய பராந்தக சோழர் தனது இளைய மகனுக்கு பட்டம் சூட்டுவதாக அறிவித்தார். தான் அரசனாவதை விரும்பாத அருள் மொழிவர்மன் (ராஜ ராஜ சோழன்) தனது சித்தப்பாவான உத்தம சோழனை ஆட்சிக்கு அமர்த்தினார். இவரது 14 வருட ஆட்சிக்கு பின்னர் அருள் மொழிவர்மன் "ராஜ ராஜ சோழன்" என்ற பட்டப்பெயருடன் ஆட்சிக்கு வந்தார். பெயருக்கு ஏற்றாட்போல் அரசர்களுக்கெல்லாம் அரசனாகவே திகழ்ந்தார் ராஜ ராஜ சோழன்.
ஆட்சி முறை
 |
ஆட்சிப் பரப்பு |
கி.பி 10ம் நூற்றாண்டளவில் (ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன்னர்) பல நாடுகளைக் கைப்பற்றி அவற்றினை சிறப்பாக ஆட்சி செய்தார். சோழ சாம்ராஜ்யம் 9 மண்டலமாக (மாகாணமாக) பிரிக்கப்பட்டு 9 மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டு பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருந்தது.
 |
சோழர் கொடி |
அவர்களின் கீழ் பல பகுதிகள் பிரதேசம், கிராமம் என நிர்வாக பிரிவுகள் ஓர் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இவை அனைத்திற்கும் தலைவனாக அரசன் இருந்தான். சிறப்பான ஓர் கட்டமைக்கப்பட்ட நிர்வாக முறையாக சோழ சாம்ராஜ்ய நிர்வாக முறை காணப்பட்டமையால் இன்றும் போற்றி புகழப்படுகிறது.
படை
 |
படை நடவடிக்கை |
கி.பி 10ம் நூற்றாண்டில் நாற்படையுடன் "காலாட் படை, குதிரை படை, யானை படை, தேர் படைகளை" கொண்டு தரையிலும், உலகின் மிக பிரம்மாண்ட கடற்படையினையும் கொண்டது தான் சோழர் படை. இப் படையினைக் கொண்டே சோழ சாம்ராஜ்யம் சிகரம் தொட்டது. இலங்கை, யாவா, சுமாத்திரா, மலேசியா (மலாய்), சிங்கபுர (சிங்கப்பூர்), கலிங்கம் என கடல் கடந்து பரந்து கிடந்த நாடுகளை தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. நால்வகை தரை படைகளையும் கப்பலில் ஏற்றி கடல் கடந்து நாடுகளுக்கு கொண்டு செல்லும் அளவிற்கு கடற்படையினை கொண்டிருந்தது. யானைகள், குதிரைகள், போர் வீரர்கள், தேர்கள் என அனைத்து படைகளை ஏற்றக்கூடிய அளவில் கப்பல்களை பாரிய அளவில் அமைத்து சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருந்தது.
 |
கடற்படை |
கடற்படை கடலில் படைகளை ஏற்றிச் செல்லும் போது கடலில் சண்டை ஏற்பட்டால் அதற்கென தனி கடற்படை சிறப்புப்பிரிவு பாதுகாப்பிற்காக முன், பின் செல்லும். இவ்வாறான மிகச் சிறந்த கடற்படை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஓர் கட்டமைப்பில் காணப்பட்டது. கடற் படைகளின் தளபதிகளை "கலபதி" எனவும் தரைப்படை தளபதிகளை "களபதி" எனவும் அழைத்தனர்.
நிதி
சோழ சாம்ராஜ்யத்தில் நிதிப் பற்றாக்குறை இருந்தது இல்லை. குறிப்பாக ராஜ ராஜ சோழன் காலத்தில் ஒரு குறையும் இல்லை. போதிய அளவு பொருளாதர உற்பத்தி காணப்பட்டமையாலே பல போர் நடவடிக்கைகளில் சோழ அரசு ஈடுப்பட்டு உள்நாட்டு உற்பத்தி, வர்த்தகம் என சோழ சாம்ராஜ்ய பொருளாதரம் மிக சிறப்பான நிலையிலே காணப்பட்டது.
நீதி
சோழ மன்னர்கள் நீதி வழங்குவதில் சிறப்பானவர்களாக திகழ்ந்தனர். உதாரணமாக பசுவுக்கு நீதி வழங்க தன் மகனையே மாய்த்த மனுநீதி சோழ மன்னன் மூலம் சோழர்களின் நீதி வழுவாமையினை புரிந்து கொள்ளலாம். நீதி துறை தனியாக இயங்கியமையால் அதன் உரிமையை சோழ அரசர்கள் நிலை நாட்டினார்கள்.
கலை
சோழ அரச பல மன்னர்களால் வளர்ச்சி அடைந்தாலும் ராஜ ராஜ சோழன் காலத்தில் புகழ் பெற்றமைக்கான காரணங்களில், சிற்ப மற்றும் கட்டிட கலையின் சிற்ப்பை பறைசாற்றும் விதமாக அமைந்த தஞ்சை பெரும் கோவிலினை எடுத்து கூறலாம். மேலும் கம்போடிய கோவிலும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்றே வரலாற்றுப் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
தனியே கருங்கற்களை கொண்டு கட்டப்பட்ட கோயிலினால் "தமிழனின் பெரும் சாதனை கண்டு உலகம் தன் புருவத்தினை உயர்த்தியது" தஞ்சை கோயிலின் கட்டுமான சிறப்பினால். இது மட்டுமல்ல பல நாடுகள் சோழர் படை என்றால் பயந்து சரணடைந்த காலமாக ராஜ ராஜ சோழன் காலம் காணப்பட்டடு.
 |
மன்னன் ராஜ ராஜ சோழனின் கல்லறை |
உலக சரித்திரத்தின் புத்தகத்தில் தமிழன் தனது பக்கத்தினை கேட்டுப் பெறவில்லை. அவனது சாதனைக்கு கொடுக்கப்பட்டது.